Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, April 4, 2021

வாக்குச்சாவடிக்கு செல்போன் கொண்டு செல்ல தடை: சென்னை காவல் ஆணையர்

வாக்குச் சாவடிகளுக்கு செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்படும் என சென்னை மாநகர காவல்துறை ஆணையர் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தமிழகத்தில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற இருக்கும் நிலையில் இன்றுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று இரவு ஏழு மணிக்கு பிறகு தேர்தல் பிரச்சாரம் செய்யக்கூடாது என அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் வாக்குப் பதிவுக்கு தேர்தல் ஆணையம் தயார் நிலையில் இருக்கும் நிலையில் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற காவல்துறையும் தயார் செய்து வருகிறது. அந்த வகையில் இன்று பேட்டியளித்த சென்னை காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் அவர்கள், ‘வாக்குச்சாவடிக்கு வாக்காளர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார் இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

No comments:

Post a Comment