Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, April 18, 2021

மின்வாரிய தேர்வுகள் ஒத்திவைப்பு !

மின்வாரிய உதவி ஆய்வாளர் உள்ளிட்ட பணிகளுக்கு நடக்கவிருந்த தேர்வு அவை அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மின்வாரிய உதவி பொறியாளர் உள்ளிட்ட பணிகளுக்கு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டது. இந்த இடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்கான கணினி வழித் தேர்வு ஏப்ரல் 24 முதல் மே 16 வரை நடைபெற இருந்தது.

இந்த நிலையில் கணினி வழித் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது. கணினி வழித் எழுத்து தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகம் அறிவித்துள்ளது. மேலும் விவரங்களுக்கு www.tangedco.gov.in -இல் அறிந்துகொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment