வாடிக்கையாளர்கள் எளிமையாக ஷாப்பிங் செய்யும் வகையில் எஸ்பிஐ வங்கி ஃப்ளக்சி பே என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தியாவின் பழமையான வங்கி என்றாலும் கூட எஸ்பிஐ இந்த காலகட்டத்திற்கு ஏற்ற மாதிரி பல அதிரடி சலுகைகளை சமீப காலமாக அறிவித்து வருகிறது. அந்த வகையில் வாடிக்கையாளர்கள் ஷாப்பிங் செய்ய வசதியாக புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஃப்ளக்சி பே என்ற இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்கள் அதிக விலை கொடுத்து பொருட்களை வாங்கினால் மாதம் சிறு சிறு தவணைகளாக பிரித்து செலுத்தலாம். வட்டியும் குறைவுதான். மேலும் செய்முறை கட்டணம் எதுவும் கிடையாது.
500 ரூபாய்க்கு மேல் மேற்கொள்ளப்படும் எல்லா பரிவர்த்தனைகளும் ஃப்ளக்சிபே திட்டத்துக்கு பொருந்தும் . இந்தத் திட்டத்தில் 6 மாதம் முதல் 24 மாதங்கள் வரை தவணைகளை செலுத்தலாம் .
ஆயிரம் ரூபாய்க்கு ஒரு பொருள் வாங்கினால் ஆறு மாத தவணைக் காலத்துக்கு மாதம் 177.5 ரூபாயாகவும் , 12 மாத தவணைக் காலத்துக்கு மாதம் 93.5 ரூபாயாகவும் , 24 மாத தவணைக் காலத்துக்கு மாதம் 51.9 ரூபாயாகவும் செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபமாக கடன்களில் பல அதிரடி சலுகைகளை வழங்கி வந்த எஸ்பிஐ வங்கி தற்போது ஷாப்பிங் பிரியர்களுக்காக இந்த சலுகையை அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment