Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, May 7, 2021

தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக இறையன்பு ஐ.ஏ.எஸ். நியமனம்!


தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக இறையன்பு ஐ.ஏ.எஸ். நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழக அரசின் புதிய தலைமை செயலாளராக இறையன்பு ஐ.ஏ.எஸ். நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே, தலைமை செயலாளராக இருந்த ராஜீவ் ரஞ்சன், தமிழ்நாடு செய்தித்தாள் கழகத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 1988ம் ஆண்டு ஐஏஎஸ் பிரிவை சேர்ந்த இறையன்பு சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்.

பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்த இறையன்பு, கூடுதல் தலைமை செயலாளராக பதவி வகித்துள்ளார். மேலும், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர், சுற்றுலா துறை செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். 2019 ம் ஆண்டு முதல் அண்ணா மேலாண்மை கல்வி நிறுவனத்தின் இயக்குநராக உள்ளார்.

பல புத்தகங்களை எழுதியுள்ள இறையன்பு, நாகை ஆட்சியராக பணியை தொடங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment