மாற்றுத் திறனாளி அரசு ஊழியர்கள் பணிக்கு வருவதில் இருந்து விலக்கு அளிக்கும் நாட்கள் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் மாற்றுத்திறனாளி அரசுப் பணியாளர்களின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு, கடந்த 6-ம் தேதி வரை மாற்றுத்திறனாளி அரசுப் பணியாளர்கள் அலுவலகத்துக்கு வருவதில் இருந்து முழுவதுமாக விலக்கு அளித்து அரசு ஆணையிட்டது.
மாநிலம் முழுவதும் கரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் முழு ஊரடங்கு வரும் 14-ம் தேதி காலை 6 மணி வரை நீீட்டித்து நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், மாற்றுத்திறனாளி அரசுப் பணியாளர்கள் ஏற்கெனவே கடந்த 6-ம் தேதி வரை அலுவலகத்துக்கு வருவதில் இருந்து முழுவதுமாக விலக்களித்து உள்ளதை மேலும் நீட்டிப்பு செய்து, வரும் 13-ம் தேதி வரை மாற்றுத் திறனாளி அரசுப் பணியாளர்கள் அலுவலகத்துக்கு வருவதில் இருந்து முழுவதுமாக விலக்கு அளித்து அரசு ஆணையிடுகிறது.
No comments:
Post a Comment