Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, June 7, 2021

"அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்த நிபுணர் குழு" - உயர்நீதிமன்றம் உத்தரவு..!

அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்தவும், பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும் நிபுணர் குழு அமைக்க வேண்டும்.
தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் சம்பள விகிதம் நிர்ணயிப்பதில்,தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியர்களின் பணிக் காலத்தையும் சேர்த்துக்கொள்ளக் கோரி வழக்கு தொடரப்பட்டது.

இதனையடுத்து,இந்த வழக்கானது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் தமிழ்செல்வி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழகக் கல்வித்துறையின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நீலகண்டன், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் அடிப்படைக் கல்வித் தரத்தினை உயர்த்தவும்,அரசுப் பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் தமிழக அரசு அனைத்து ஆக்கபூர்வ நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகத் தெரிவித்தார்.

இதனையடுத்து,அரசு பள்ளி மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்துவதற்கும், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும் நிபுணர் குழு அமைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும்,அரசுப் பள்ளிகளை அருகிலுள்ள தொழில் நிறுவனங்கள் தத்தெடுத்து,பள்ளிகளின் உள்கட்டமைப்பினை மேம்படுத்துவது குறித்தும் பள்ளிக்கல்வித்துறை கவனத்தில் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி,இந்த வழக்கின் விசாரணையை நீதிபதிகள் எட்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

No comments:

Post a Comment