JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
கொரோனா பரவல் காரணமாக கடந்த இரு ஆண்டுகளில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்தப்படவில்லை. சென்ற ஆண்டு பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு கொரோனா பரவலுக்கு முன்னரே நடத்தப்பட்ட நிலையில் இந்த ஆண்டு நடத்தமுடியாத நிலை ஏற்பட்டது.
கொரோனா பரவல் தற்போது குறைந்து வரும் நிலையில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும்போது பள்ளிகள் திறப்பு குறித்து மருத்துவ வல்லுநர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களிடம் கருத்து கேட்டு முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
பிற மாநிலங்களில் பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் ஆகஸ்ட் மாதம் பள்ளிகள் திறக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் மூன்றாவது அலை குறித்த அச்சமும் நிலவுகிறது. இந்த சூழலில் பள்ளிக் கல்வித்துறை முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
அந்த வகையில் நடப்பு கல்வியாண்டில் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாதந்தோறும் அலகுத்தேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கல்வி தொலைக்காட்சி, ஆன்லைனில் நடத்தப்படும் பாடங்களில் இருந்து மாதந்தோறும் அலகுத் தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
50 மதிப்பெண்களுக்கு மாத இறுதியில் அலகுத்தேர்வு நடத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. வாட்சப் வாயிலாக 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அலகுத்தேர்வு நடத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.
Our Quiz Maker is completely free for all Teachers, Professors, Students, Competitive Exam Guidance Friends, Bloggers..
ReplyDeleteNo Watermarks in My website Page Link.
Our Quiz Generator for Completely Free.
https://quizmaker.gmsvision.in