Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, August 31, 2021

பள்ளிகளில் மாலை 3.30 மணிக்குள் வகுப்புகளை முடித்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி



9,10,11,12 ஆம் வகுப்புகளுக்கு நாளை பள்ளிகள் திறப்பு மாலை 3:30 மணிக்குள் வகுப்புகளை முடித்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது மாணவர்கள் மாஸ்க் போடாமல் வந்தாலோ அல்லது கிழிந்து இருந்தாலோ பள்ளியில் மாஸ்க் தர ஏற்பாடு என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். மேலும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி !


* மாணவர்கள் நிச்சயம் மாஸ்க் அணிந்து வரவேண்டும்.
* ஒவ்வொரு வகுப்பறையிலும் கிருமிநாசினி பாட்டில் வைத்திருக்க வேண்டும்.
* 2 ஒரு நாளில் 5 வகுப்புகள் மட்டும் செயல்படும்.
*விளையாட்டு நேரம் கிடையாது காலை 9.30 மணிமுதல் மாலை 3.30 மணிவரை , வாரத்தில் 6 நாட்கள் மட்டுமே வகுப்புகள் நடைபெறும் தொடக்கம் முதலே பாடம் நடத்தப்படாது.
*மாணவர்கள் உளவியல் ரீதியாக தயாரான பின்னரே பாடம் நடத்தப்படும்
* பெற்றோர்கள் , மாணவர்கள் அச்சப்படத் தேவையில்லை ; மாணவர்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்யும்.

No comments:

Post a Comment