JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Friday, October 22, 2021

கற்றல் குறைபாடு உடைய குழந்தைகளின் எண்ணிக்கை விவரங்கள் கோரி தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு!

தமிழக அனைத்து மாவட்டங்களிலும் கல்வித் துறையின் கீழ் , மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கட்டுப்பாட்டில் சயல்பட்டுவரும் அனைத்து அரசு பள்ளிகள் / அரசு பெறும் பள்ளிகள் / தனியார் பள்ளிகளில் பயிலும் கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகள் எண்ணிக்கை விவரம் அவசியமாக தேவைப்படும் நிலையில் , தங்கள் மாவட்டத்தில் , தங்கள் கட்டுப்பாட்டில் செயல்பட்டுவரும் அனைத்து அரசு பள்ளிகள் / அரசு உதவி பெறும் பள்ளிகள் / தனியார் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளில் கீழ்கண்ட குறைபாடுகள் உள்ள குழந்தைகள் எண்ணிக்கை விவரங்களை 15 நாட்களுக்குள் ஆணையத்திற்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

1. கற்றல் குறைபாடுள்ளவர்கள் ,
2. மெல்லக் கற்போர்
3. அறிவுத்திறன் குறைவாக உள்ளோர் .
4. மன இறுக்கம் மற்றும் அறிவுசார் குறைபாடுகள் உடையோர்.



No comments:

Post a Comment