Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, January 10, 2022

தமிழகம் முழுவதும் 10,11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு... வெளியான தகவல்..!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா பரவல் பரவ தொடங்கியுள்ளது. அதுமட்டுமில்லாமல் உருமாறிய ஒமைக்ரான் வைரசும் மிக வேகமாக பரவி வருகிறது.

இதனால் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிறு கிழமைகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதுமட்டுமில்லாமல் 1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மேலும் பொது தேர்வு எழுதும் 10,11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 10 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் விடுமுறை வழங்கி ஆன்லைன் வகுப்புகள் நடத்த வேண்டும் என்று அரசுக்கு பல்வேறு கோரிக்கைகள் வருகிறது.

அதனை தொடர்ந்து மூன்றாம் பருவம் துவங்கி ரொம்ப நாள் ஆகியும் பள்ளிகளிலிருந்து மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்பட வில்லை என்று பெற்றோர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். அதனால் பள்ளி மாணவர்களுக்கு காலதாமதமின்றி உடனடியாக பாடப்புத்தகங்களை வழங்க வேண்டும் என்று அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு முதன்மை கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். 

பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்ட பிறகு ஆன்லைன் வகுப்புகளை விரைந்து நடத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். 

இந்த ஆலோசனையில், 10 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை ரத்து செய்துவிட்டு ஆன்லைன் வகுப்புகள் நடத்துவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

No comments:

Post a Comment