தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு நாளை காலை வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்ப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்திக்க உள்ளார்.
கொரோனா தொற்றால் கடந்த ஜனவரி மாதம் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்ட நிலையில் தற்போது வைரஸ் பரவல் குறைந்துள்ளதால் மீண்டும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. அண்மையில் பள்ளி மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வும் நடைபெற்றது. இந்நிலையில், நடப்பு கல்வி ஆண்டில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கண்டிப்பாக பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருந்தார்.
No comments:
Post a Comment