Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, September 21, 2022

காலாண்டு தேர்வு விடுமுறையில் மாற்றம்

அரசு பள்ளிகளின் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும், காலாண்டு தேர்வு விடுமுறை, அக்., 8 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, தொடக்க கல்வி இயக்குனர் அறிவொளி அனுப்பிஉள்ள சுற்றறிக்கை:தொடக்க கல்வி இயக்குனரகத்தின் கீழ் செயல்படும், அனைத்து தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளிலும், ஒன்று முதல் 5ம் வகுப்பு வரையில் பாடம் எடுக்கும் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு, அக்.,6 முதல் 8 வரை ஒன்றிய அளவில் பயிற்சி நடத்தப்பட உள்ளது.

எனவே, அரசு தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் படிக்கும், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும், முதல் பருவ தேர்வான காலாண்டு தேர்வு விடுமுறை, அக்., 8 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள், அக்., 6 முதல் வழக்கம்போல், பள்ளிகளுக்கு வர வேண்டும். இதை, அனைத்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு, மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டார கல்வி அலுவலர்கள் வழியே தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment