Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, October 2, 2022

900 அறிவியல் உதவியாளர் பணி: எஸ்எஸ்சி தேர்வாணையம் முக்கிய அறிவிப்பு

இந்திய வானிலைத் துறையில் அமைச்சகம் சாரா, அரசிதழ் பதிவுறா குரூப் 'பி' பதவிகளுக்கான (Group 'B' Non-Gazetted, Non-Ministerial post) ஆள் சேர்க்கை அறிவிப்பை மத்திய பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கியமான நாட்கள்:

ஆள் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள்: 30-09-2022

இணைய வழியில் விண்ணப்பபங்கள் சமர்ப்பிப்பதற்குரிய கடைசி நாள்: 18-10-2022; (அன்றிரவுக்குள் விண்ணப்பக் கட்டணம் செலுத்தியிருக்க வேண்டும்)

கணினி வழியில் எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: டிசம்பர் மாதம் ஆகும்.

கல்வித் தகுதி: குறைந்தபட்சம் இயற்பியலை ஒரு பாடமாக கொண்டு, அறிவியல், கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம் ஆகிய ஏதேனும் ஒரு பாடத்தில் அங்கீகரிக்கப்பட்ட பட்டப்படிப்புடன் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.

(அல்லது)

எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்பட்டத்தில் பொறியியல் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18-10-2022 அன்றைய நிலையில் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் 35 வயதுக்குள்ளும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 33 வயதுக்குள்ளும் இருத்தல் வேண்டும். மேலும், முன்னாள் இராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நடைமுறை விதிகளின் படி வயது வரம்பில் சலுகை வழங்கப்பட்டுள்ளது.

விண்ணப்பக் கட்டணம்: இதற்கான, விண்ணப்பக் கட்டணம் ரூ.100 ஆகும்.இதில் பெண்கள், எஸ்.சி.எஸ்.டி, வகுப்பினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பம் செய்வது எப்படி? இத்தேர்வுக்கு sscnic.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

தெரிவு செய்யப்படும் முறை: கணினி வழியில் நடைபெறும் எழுத்துத் தேர்வில் பெரும் மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி பட்டியல் தயாரிக்கப்படும்.


தமிழ்நாட்டில் சென்னை, கோவை, கிருஷ்ணகிரி, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர் மற்றும் புதுச்சேரி ஆகிய மையங்களில் தேர்வு நடைபெறும்.

No comments:

Post a Comment