Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, November 21, 2022

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 21.11.2022


திருக்குறள் :

பால்:அறத்துப்பால் 

இயல்:பாயிரவியல் 

அதிகாரம்: இல்வாழ்க்கை

குறள் : 50
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.

பொருள்:
தெய்வத்துக்கென எத்தனையோ அருங்குணங்கள் கூறப்படுகின்றன. உலகில் வாழ வேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன் வானில் வாழ்வதாகச் சொல்லப்படும் தெய்வத்துக்கு இணையாக வைத்து மதிக்கப்படுவான்.

பழமொழி :

Nothing so bad but it might have been worse.
தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்று. 

இரண்டொழுக்க பண்புகள் :

1. நான் பிறருக்கு வலது கையால் செய்யும் உதவி இடது கைக்கு கூட தெரியாமல் செய்வேன்.

 2. உதவி பிறரின் வருத்தம் போக்க, பிறர் என்னை புகழ அல்ல

பொன்மொழி :

உங்களிடம் உள்ள மிகவும் விலைமதிப்பற்ற வளம் நேரமாகும். --ஸ்டீவ் ஜாப்ஸ்

பொது அறிவு :

1. முதல் உலகப்போர் நடந்த ஆண்டு எது ? 

 1914 ஆம் ஆண்டு . 

 2. உலக சமாதான சின்னம் எது ?

 ஒலிவ் மரத்தின் கிளை.

English words & meanings :

ate -past tense of eat, verb. சாப்பிட்டு விட்டேன். வினைச் சொல். eight - number 8. noun எண் எட்டு. பெயர்ச் சொல்.both homonyms.

ஆரோக்ய வாழ்வு :

ஊட்டச்சத்து நிறைந்த பாதாம் சிற்றுண்டிக்கு ஆரோக்கியமான மாற்று உணவாக இருக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அதே சமயம் தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய ஆய்வு முடிவின்படி, தினசரி 56 கிராம் பாதாம் சாப்பிடுவது, ப்யூட்ரேட்டின் அளவை ஊக்குவித்து குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

NMMS Q

0.04, 0.09, 0.25, 0.49, ________ 

 விடை: 0.121 

 விளக்கம்- பகா எண்களின் தொடர்ச்சி மற்றும் அதன் வர்க்கமாக உள்ளது.

நவம்பர் 21


சர் சந்திரசேகர வெங்கட ராமன் அவர்களின் நினைவுநாள்


சர் சந்திரசேகர வெங்கட ராமன் (Chandrasekhara Venkata Raman) (நவம்பர் 71888 - நவம்பர் 211970) பெரும் புகழ் நாட்டிய இந்திய அறிவியல் அறிஞர் ஆவார். இவர் 1930ல் இயற்பியல் துறைக்கான நோபல் பரிசைப் பெற்றார். ஒளி ஒரு பொருளின் ஊடே செல்லும் பொழுது சிதறும் ஒளியலைகளில் ஏற்படும் அலைநீள மாற்றத்தை இவர் கண்டுபிடித்தார். இப்படிச் சிதறும் ஒளியின் அலைநீள மாற்றத்திற்கு இராமன் விளைவு (Raman Effect) என்று பெயர். இக்கண்டுபிடிப்புக்குத் தான் இவருக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டது. இக்கண்டுபிடிப்பு இன்று பொருள்களின் பல விதமான பண்புகளைக் கண்டறிய (பொருளுக்கு கேடு ஏதும் நேராமலும்) மிகவும் பயனுடையதும் உலகில் புகழ் பெற்றதும் ஆகும்

உலகத் தொலைக்காட்சி நாள் 

உலகத் தொலைக்காட்சி நாள் (World Television Day) உலகெங்கும் ஆண்டுதோறும் நவம்பர் 21 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.

நவம்பர் 21, 1996-ஆம் ஆண்டு நடைபெற்ற அனைத்துலகத் தொலைகாட்சிக் கருத்தரங்கத்தின் பரிந்துரையின் பேரில் ஐக்கிய நாடுகள் அவை நவம்பர் 21 ஆம் நாளை உலகத் தொலைக்காட்சி நாளாக அறிவித்தது. இக்கருத்தரங்கில் உலகில் தொலைக்காட்சியின் கூடிய முக்கியத்துவம் பற்றி கலந்துரையாடப்பட்டது. உலக நாடுகள் அமைதி, பாதுகாப்பு, பொருளாதாரம், சமூக மாற்றங்கள் மற்றும் தமது கலை, கலாசார தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தமக்கிடையே பரிமாறிக் கொள்ள இந்நாள் சிறப்பான நாளாகக் கருதப்பட்டது. இதன்படி முதல் தொலைக்காட்சி நாள் 1997-ம் ஆண்டு கொண்டாடப்பட்டது.

நீதிக்கதை

சிட்டுக்குருவியின் ஆசை

இரண்டு தூக்கணாங்குருவிகள் ஒரு கூடு கட்டி, அதில் வசித்து வந்தன. ஒருநாள், இரை தேட அவை இரண்டும் வெளியே போயிருந்த சமயத்தில், ஒரு சிட்டுக்குருவி பறந்து வந்து தூக்கணாங்குருவியின் கூட்டுக்குள் நுழைந்து கொண்டது. சிறிது நேரத்தில் ஒரு தூக்கணாங்குருவி பறந்து வந்தது. தன் கூட்டுக்குள் சிட்டுக்குருவி இருப்பதைப் பார்த்து, குருவி அக்கா எங்கள் வீட்டிற்குள் எதற்கு நுழைந்தாய் வெளியே போ என்றது. நான் போகமாட்டேன். உன்னால் முடிந்ததை பார்த்துக் கொள். இனிமேல் இது என் வீடு என்றது குருவி. 

தூக்கணாங்குருவி அங்கிருந்து வருத்தத்துடனும், யோசனையுடனும் பறந்து போனது. சிட்டுக்குருவி, கூட்டில் உட்கார்ந்துக் கொண்டிருந்தது. திடீரென்று தூக்கணாங்குருவிகளின் கூட்டம் பறந்து வந்து ஒவ்வொன்றும் ஈரமண்னை அலகில் கொத்தி வந்து, கூட்டின் வாசலைக் கொஞ்சம் கொஞ்சமாக அடைத்து பின், சிட்டுக்குருவியை கூட்டுக்குள் வைத்து ஒரேடியாக அடைத்துப் பூசிவிட்டுப் பறந்து போனது. அடுத்தவர்களின் வீட்டிற்குள் நுழைந்தது தவறு என தாமதமாக உணர்ந்த சிட்டுக்குருவி, அந்தக் கூட்டுக்குள்ளேயே மூச்சடைத்து இறந்து போனது. 

நீதி :
அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்பட்டால் இதுதான் கதி.

இன்றைய செய்திகள்

21.11.22

* பல மின்இணைப்பு வைத்துள்ளவர்கள் ஒரே ஆதார் எண்ணை இணைக்கலாம்: மின்வாரிய அதிகாரிகள் விளக்கம்.

* சென்னை உள்ளிட்ட 7 மண்டலங்களில் டிச.23-ல் தர்ணா: அரசுப் பணியாளர் சங்கம் அறிவிப்பு.

* தமிழ்நாடு அரசு சார்பில் நடந்து வரும் அகழ்வாய்வுகள் வரலாற்றுக்கு புதிய தரவுகளையும், தகவல்களையும் தெரிவித்து வருகின்றன என தொல்பொருள் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

* பாரதியார் பிறந்த நாளை தேசிய மொழிகள் தினமாக அறிவிக்கிறது மத்திய அரசு: வாரணாசியில் பாரதி நினைவிட பணியையும் மேற்கொள்ள திட்டம்.

* டிசம்பர் 7-ல் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

* ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக சேர்க்க இந்தியாவுக்கு பிரான்ஸ் ஆதரவு.

* 2வது டி20 போட்டி - நியூசிலாந்து அணியை எளிதில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி.

* சர்வதேச டி20 கிரிக்கெட்: ஒரே போட்டியில் பல சாதனை படைத்த சூர்யகுமார் யாதவ்.

* 32 அணிகள் பங்கேற்கும் உலக கோப்பை கால்பந்து திருவிழா கத்தாரில் நேற்று கோலாகலமாக தொடங்கியது.

Today's Headlines

* Multiple Electricity Connection Holders Can Link Same Aadhaar Number: Electricity Authority Explanation

 *Dharna on Dec. 23 in 7 mandals including Chennai: Government Employees Association announcement.

 *Archeology Minister Thangam Thennarasu said that the ongoing excavations on behalf of the Tamil Nadu government are providing new data and information to history.

 *Central Govt declares Bharathi's birthday as National Languages ​​Day: Plans to build Bharati Memorial in Varanasi

* It has been announced that the Winter Session of Parliament will begin on December 7.

 * UN  France supports India's permanent membership in the Security Council.

 * 2nd T20I - India win by beating New Zealand easily.

 * International T20 Cricket: Suryakumar Yadav who achieved many records in a single match.

 * The  World Cup football festival started yesterday in Qatar with 32 teams
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment