Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, December 13, 2022

ரேஷன் கடை ஊழியர்கள் நியமனம் : நடைமுறைகள் என்ன? நிபந்தனைகளை என்ன?




தமிழ்நாடு முழுவதும் நியாய விலைக் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர்கள் (Salesman) மற்றும் கட்டுநர்கள் (packer) பதவிகளுக்கான நேர்காணல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
எந்தவித எழுத்துத் தேர்வும் இல்லாமால், நேரடி நியமன நடைமுறையின் மூலம் இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இந்த நேரடி நியமனத்தின் போது பின்பற்றப்படும் நடைமுறைகள் என்ன? நிபந்தனைகளை என்ன? அரசுப் பணிகளுக்கான இடஒதுக்கீடு நடைமுறை பின்பற்றப்படுமா? நேர்காணல் தேர்வு எப்படி இருக்கும்? வெளிப்படைத் தன்மை எவ்வாறு உறுதி செய்யப்படுகிறது? வெற்றி வாய்ப்பு யாருக்கு அதிகம் உள்ளிட்டவைகளை இங்கு பார்க்கலாம்.

தெரிவு முறை எப்படி இருக்கும்?

எந்தவித எழுத்துத் தேர்வும் கிடையாது.

கல்வித் தகுதி மற்றும் நேர்முகத் தேர்வில் அளிக்கப்பட்ட சராசரி மதிப்பெண்கள் முறையே 50:50 என்ற விகிதத்தில் இறுதி பட்டியல் தயாரிக்கப்படும்.

விற்பனையாளர் பதவிக்கு 12ம் வகுப்பு தேர்ச்சியும், கட்டுநர் பதவிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர் நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதியை விட அதிகபட்ச கல்வித் தகுதியை பெற்றிருந்தால் கூடுதல் நல்லது. அதிகபட்ச கல்வித் தகுதி பெற்ற காரணத்தினால் உங்கள் மனு நிராகரிக்கப்படாது.

மேலும், தமிழ் மொழியில் எழுதி படிக்க போதுமான திறன் பெற்றிருக்க வேண்டும்.

நேர்முகத் தேர்வு எப்போது?

அந்தந்த மாவட்ட கூட்டுறவுத் துறை நிலையங்கள் , நேர்காணல் தேதியை அறிவித்துள்ளன. சென்னை மாவட்டத்தில் நேர்முகத் தேர்வு நேற்று தொடங்கியது. திருப்பத்தூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை (14.12.2022) முதல் நேர்முகத் தேர்வு தொடங்குகிறது. திருவள்ளூர், கோயம்பத்தூர், சேலம், மாவட்டத்தில் வரும் நாளை மறுநாள் முதல் (15.12.2022) நேர்காணல் தொடங்க இருக்கிறது.

விண்ணப்பதாரர்கள், தங்கள் விண்ணப்பத்தில் தெரிவித்துள்ள மின்னஞ்சல் முகவரி (Email ID) மூலம் தேர்வு அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நேர்முகத் தேர்வு மையம், நேர்காணல் குழு எண், நேர்முகத் தேர்வு நாள்/நேரம் உள்ளிட்ட விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்வது எப்படி?

விண்ணப்பித்தில் தெரிவித்துள்ள மின்னஞ்சல் முகவரிக்கு, அந்தந்த மாவட்ட கூட்டுறவு சங்க ஆள்சேர்க்கை அலுவலகம் மூலம் அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்வதற்கான பதிவு எண்/கடவு சொல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த பதிவு எண்/கடவுச் சொல் மூலம், நீங்கள் விண்ணப்பித்த அந்தந்த மாவட்ட இணைதளத்தில் இருந்து அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளுதல் வேண்டும்.

ரேஷன் கடை பணியிடங்களில் இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படுமா?

ஆம்!!! தமிழ்நாடு அரசின் இடஒதுக்கீடு விதிகள் பின்பற்றப்படும். நடைமுறையில் உள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வுக்குப் பின் பின்பற்றப்படும் இடஒதுக்கீடு மற்றும் இன சுழற்சி முறை பின்பற்றப்படும். உதாரணமாக, 198 காலிப் பணியிடங்கள்

மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பதாரர்களுக்கு சலுகை உண்டா ?

ஆம். நடைமுறையில் உள்ள அரசு ஆணைகள் இந்த நியமனங்களின் போது பின்பற்றப்படும்.

தமிழ் வழியில் பயின்றோருக்கு சலுகைகள் உண்டா?

ஆம். நடைமுறையில் உள்ள அரசு ஆணைகள் இந்த நியமனங்களின் போது பின்பற்றப்படும்

முன்னாள் ராணுவத்தினருக்கு சலுகை உண்டா?

ஆம்!!! முன்னாள் ராணுவத்தினர்க்கு வயது வரம்பில் சலுகை அளிக்கப்படும். அதன்படி, இடஒதுக்கீடு பிரிவின் கீழ் முன்னாள் ராணுவத்தினர் வயது வரம்பு 53-க்கு கீழ் இருக்க வேண்டும். பொது பிரிவின் கீழ் முன்னாள் ராணுவத்தினர் வயது வரம்பு 48க்கு கீழ் இருக்க வேண்டும்.

திருநங்கை விண்ணப்பத்தாரர்கள் சலுகைகள்?

பெண் என அடையாளப்படுத்திக் கொள்ளும் திருநங்கை விண்ணப்பதாரர்கள், பெண்களுக்கான 30% இடஒதுக்கீட்டின் கீழும், பொதுப் பிரிவினருக்கான 70% கீழும் பயன்களைப் பெறுவர்.

வெளிப்படைத்தன்மை எவ்வாறு உறுதி செய்யப்படுகிறது?

தெரிவு செய்யப்பட்டவர்கள் பட்டியல் அந்தந்த மாவட்ட கூட்டுறவு வேலைவாய்ப்பு நிலையத்தில் வெளியிடப்படும். தெரிவு பட்டியல் குறித்து மேல்முறையீடு செய்யும் வாய்ப்பு வழங்கப்படும். முடிவுகள் அறிவிக்கப்பட்ட 90 நாட்களுக்குள் உரிய காரணங்களுடன் மேல் முறையீடு செய்ய வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் மனநிலை:

இந்த பதவிகளுக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள், நேர்முகத் தேர்வின் நம்பகத் தன்மையைக் குறித்து கவலை தெரிவித்து வருகின்றனர். முன்னதாக, அறிவிக்கப்பட்ட 2748 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு, நேர்முகத் தேர்வுக்கு உயர் அளவாக 15 மதிப்பெண்கள் மட்டுமே வழங்கப்பட்டது. ஆனால், ரேஷன் கடை நியமனங்களில் உயர் அளவு மதிப்பெண்ணாக 50% மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது, அரசியல் செல்வாக்குடன் போட்டியிடும் விண்ணப்பதாரர்கள், உறவு முறை செல்வாக்குடன் போட்டியிடும் விண்ணைப்பாத்தார்களுக்கு சாதகமாக அமையும் என்று தெரிவிக்கின்றனர்.

மேலும், தற்போது கடைபிடிக்கப்படும் வழிமுறைகள் போதாத்தன்மையுடன் உள்ளதாகவும், வெளிப்படைத் தன்மையை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment