Wednesday, January 18, 2023

1720 செவிலியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு... தகுதியானவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாட்டில் 21 மாவட்டங்களில் பொதுச் சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து துறையின் கீழ் செயல்படும் அரசு ஆரம்பச் சுகாதார நிலையம் மற்றும் நகர்ப்புற ஆரம்பச் சுகாதார நிலையங்களில் உள்ள செவிலியர் மற்றும் இடைநிலை சுகாதார பணியாளர்களுக்கான 1720 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இப்பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படவுள்ளது. விண்ணப்பதார்கள் 50 வயதிற்குள் இருக்க வேண்டும். மாத ஊதியமாக ரூ.18,000 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் பணிப்புரிந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

பணியின் விவரங்கள்:

மாவட்டத்தின் பெயர்பணியிடம்கடைசி நாள்
தென்காசி1027.01.2023
இராமநாதபுரம்5728.01.2023
சிவகங்கை4127.01.2023
தூத்துக்குடி4231.01.2023
விருதுநகர்1325.01.2023
நாமக்கல்21025.01.2023
மதுரை8827.01.2023
கிருஷ்ணகிரி17231.01.2023
திருப்பூர்12630.01.2023
கன்னியாகுமரி4027.01.2023
புதுக்கோட்டை11427.01.2023
தஞ்சாவூர்14030.01.2023
திருச்சி11931.01.2023
கோயம்புத்தூர்11930.01.2023
பெரம்பலூர்6127.01.2023
செங்கல்பட்டு3527.01.2023
திருப்பத்தூர்3125.01.2023
மாயிலாடுதுறை10127.01.2023
திருவள்ளுர்7831.01.2023
கள்ளக்குறிச்சி5425.01.2023
நாகப்பட்டினம்6928.01.2023
மொத்தம்1720

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணியிடங்களுக்குச் செவிலியர்கள் அந்தந்த மாவட்டங்களின் இணையதளத்தில் உள்ள விண்ணப்பப்படிவத்தைப் பதிவிறக்கம் செய்து அதனைப் பூர்த்தி செய்து தகுந்த சான்றிதழ்களின் நகல்களுடன் இணைத்து தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment