Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, February 21, 2023

பச்சை வெங்காயம் சாப்பிட்டு பச்சை தண்ணீர் குடித்தால் என்னாகும் தெரியுமா ?

உடலில் அதிக உஷ்ணம் சேர்வதால் உண்டாகும் பிரச்சினைதான் நீர் கடுப்பு .இதனால் சிறுநீர் அதிக வலியுடன் சொட்டு சொட்டாக போகும் .இது குறைவாக தண்ணீர் குடிப்போருக்கும் ,நீண்ட தூரம் பயணத்தில் சிறுநீர் கழிக்காமல் அதை அடக்கி வைப்போருக்கும் ,இந்த நீர் கடுப்பு பிரச்சினை உண்டாகிறது .மேலும் இதை கவனிக்காவிட்டால் பல கிருமிகள் பல மடங்கு பெருகி ,நோய் தொற்றை உண்டாக்கி விடும் .இதனால் இதை சில இயற்கை வைத்தியம் மூலம் வீட்டிலேயே சரி செய்யலாம் ,முதலில் ஒரு க்ளாஸ் தண்ணீரில் லெமன் மற்றும் உப்பு அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்து குடிக்கலாம் .அல்லது வெந்தயத்தை லேசாக வறுத்து பொடி செய்து அதை மோரில் கலந்து குடிக்க குணமாகும் .தண்ணீரில் மல்லி தூளை ஊற வைத்து அதை மறுநாள் குடித்து வர இந்த நீர் கடுப்பு குணமாகும் ,மேலும் சில வைத்திய முறைகளை பார்க்கலாம்



1.நான்கிலிருந்து ஐந்து வெங்காயங்களை சாப்பிட்டு பின்னால் ஒரு லிட்டர் அளவிற்கு தண்ணீர் பருக வேண்டும்.

2. பத்து நிமிடத்தில் எல்லா வலியும் பறந்து சிறுநீர் பாதையில் இருக்கும் தொற்றினால் ஏற்பட்ட வீக்கம் மறைந்து சிறுநீர் கழிப்பதில் இருந்து வந்த தடைகள் நீங்கும்.

3.மேலும் உடல் உஷ்ணம் தணிந்து உடல் குளிர்ச்சியாகி சட்டென நீர் கடுப்பு பிரச்சனை மாயமாய் மறைந்து போகும்.

No comments:

Post a Comment