Follow the THAMIZHKADAL OFFICIAL channel on WhatsApp:
Follow the THAMIZHKADAL OFFICIAL channel on Telegram










Wednesday, March 1, 2023

ஆசிரியர்களுக்கு டேப் மற்றும் ஆசிரியர்களின் நலனை காக்க ரூ.225 கோடியில் புதிய திட்டங்களை அறிவித்தார் முதல்வர் மு.க ஸ்டாலின்

Add This Number In Your Whatsapp Groups -6379884356





ஆசிரியர்களின் நலனை காக்க ரூ.225 கோடியில் புதிய திட்டங்களை செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளதாக முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆசிரியர்கள் நலனுக்கான புதிய திட்டங்களை முதல்வர் அறிவித்துள்ளார். அந்த வகையில்,






* அனைத்து இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கும் கைக்கணினி (டேப்) வழங்கப்படும்.

* மாறிவரும் கற்றல், கற்பித்தல் முறைகளுக்கு ஏற்ப தங்களை மெருகேற்றிக் கொள்ள ஆசிரியர்களுக்கு டேப்லெட் வழங்கப்படும்.

* அனைத்து ஆசிரியர்களுக்கும் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்யப்படும்.

* அரசு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி திட்டங்களை மாணவர்களிடையே கொண்டு சேர்க்கும் ஆசிரியர்கள் வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர்.

* உயர்கல்வி பயிலும் ஆசிரியர்களின் குழந்தைகளுக்காக வழங்கப்படும் கல்விச்செலவு ரூ.50,000 வரை உயர்த்தி வழங்கப்படும்.

* கற்றல் இடைவெளியை குறைக்கும் வகையில் எண்ணும் எழுதும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

* பள்ளிகளில் நடைபெற்ற கலை திருவிழாவில் 25 லட்சம் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

* கலை திருவிழாவில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர்.

* படிப்புத் திறனும், படைப்பு திறனும் பெற வேண்டும் என்பதே அரசின் நோக்கம்.

* மொத்தம் ரூ.225 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும் என முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.





No comments:

Post a Comment

Popular Feed