Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, June 26, 2023

நீங்கள் 100 வருடங்கள் நலமாக வாழ "கருஞ்சீரகம்" மட்டும் போதும்..!

கருஞ்சீரகம் பல நன்மையை நம் உடலுக்கு தருகிறது. பொதுவாகவே எந்த ஒரு உணவை எடுத்துக் கொண்டாலும் அது சாதாரணமாக நம் உடலில் ஜீரணிக்க கூடியதாக இருக்கும் தருணத்தில் சரியாக படும்.

ஒருசில உணவுப் பொருட்கள் ஒருசிலருக்கு ஜீரண கோளாறை ஏற்படுத்தும். சாப்பிட்ட அரை மணி நேரத்தில் தொண்டையில் வலி ஏற்படுதல் அதன்பின்னர் சளி பிடித்தல் தலைவலி வாந்தி மயக்கம் என சொல்லிக் கொண்டே போகலாம்.

ஆனால் இவை அனைத்திற்கும் பொதுவாக கருஞ்சீரகம் எப்படி எல்லாம் பயன்படுகிறது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

கருஞ்சீரகத்தின் நன்மைகள்:

கருஞ்சீரகப் பொடியுடன் பனைவெல்லம் கலந்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பிரசவத்திற்கு பின் கருப்பை சுத்தமாகும். இது தாய்மார்களுக்கு மிகவும் அத்தியாவசிய ஒன்றாக கருதப்படுகிறது. இதேபோன்று இன்றைய நிலையில் அனைவருக்கும் ஓர் சவாலான விஷயமாக பார்க்கப்படுவது உடல் பருமன் மற்றும் உடலில் தேங்கி இருக்கும் தேவையில்லாத கொழுப்பை அகற்றுவது என்பதே....


இதற்கு என்ன செய்ய வேண்டும் தெரியுமா..?

கருஞ்சீரகம், வெந்தயம், ஓமம் இவை மூன்றையும் நன்கு வறுத்து பொடி செய்து கொண்டு இரவில் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்து வந்தால் உடலில் தேவையில்லாமல் இருக்கும் கொழுப்புகளை நீக்கி ரத்தம் சுத்திகரிக்க செய்யும். 

மற்றொரு விஷயம் என்னவென்றால் தோல் நோய் கண் வலி மாதவிலக்கு பிரச்சனை மற்றும் சளி இருமல் இவை அனைத்துக்கும் ஓர் நல்ல மெடிசின் பயன்படக்கூடியது கருஞ்சீரகம் என்பது குறிப்பிடத்தக்கது.

பித்தப்பையில் கல் மற்றும் கிட்னியில் உள்ள கற்களை கரைக்க இந்த கருஞ்சீரகம் மிகவும் பயன்படுகிறது. கருஞ்சீரகத்தை பொடி செய்து கொள்ளுங்கள். பின் ஒரு கிளாஸ் வெந்நீரில் ஒரு ஸ்பூன் கருஞ்சீரகம் பொடியை சேர்த்து நன்றாக கலந்து காலை வெறும் வயிற்றில் ஒரு மண்டலம் வரை அருந்திவர வேண்டும். இவ்வாறு செய்வதினால் பித்தப் பையில் உள்ள கற்கள் மற்றும் சிறுநீரக கற்கள் கரைய ஆரம்பிக்கும். மேலும் ஜீரண சக்தி மேம்படுவதுடன் வாயு தொல்லை நீங்கி வயிறு சம்மந்தமான எந்த பிரச்சனைகளும் வராமல் தடுக்கும்.

சளி, இருமல், காய்ச்சல், தலைவலி போன்ற ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்கின்ற அனைவரும் ஒரு ஸ்பூன் கருஞ்சீரகத்தில் தேன் கலந்து சாப்பிட்டு வர பிரச்சனைகள் குணமாகி உடல் நன்கு ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் காணப்படும். இந்த டிப்ஸினை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பின்பற்றலாம். இருப்பினும் தங்கள் குழந்தைக்கு கொடுக்க தயக்கமாக இருந்தால் தங்கள் குழந்தை நல மருத்துவரிடம் ஆலோசனை கேட்கவும்.

தோல் நோயால் பாதிக்கப்பட்ட நபர்கள் கஸ்தூரி மஞ்சளுடன் சிறிதளவு கருஞ்சீரகம் சேர்த்து அரைத்து தோல் நோய் ஏற்பட்டுள்ள இடத்தில் தொடர்ந்து பயன்படுத்தி வர பிரச்சனை குணமாகும். இவ்வாறு இந்த கஸ்தூரி மஞ்சளை பயன்படுத்துவதினால் தேமல், அரிப்பு, தடிப்பு மற்றும் தோல் நோய்கள் அனைத்தும் குணமாகும்.

மாதவிடாய்க் கோளாறுகளின் போது அடிவயிறு கனமாகி, சிறுநீர் கழிக்கச் சிரமப்படும் பெண்களுக்கு இது நல்ல மருந்து. வறுத்துப் பொடித்த கருஞ்சீரகத்துடன் தேன் அல்லது கருப்பட்டி கலந்து, மாதவிடாய் தேதிக்கு பத்து நாட்களுக்கு முன்பிருந்தே ஒரு டேபிள் ஸ்பூன் சாப்பிடலாம். இது வயிற்று வலி, ரத்தப்போக்கு உள்ளிட்ட மாதவிடாய்ச் சிக்கல்களை சரி செய்யும் வயிறு கனம் குறைந்து நன்றாகச் சிறுநீர் வெளியேற உதவும்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த கருஞ்சீரகத்தை முறையாக பயனப்டுத்தினால் ஆரோக்கியமாக பல ஆண்டுகள் வாழலாம்

No comments:

Post a Comment