THAMIZHKADAL STUDY MATERIAL

கிழே உள்ள தலைப்பை தொடவும்

FOLLOW THE THAMIZHKADAL WEBSITES
WWW.THAMIZHKADAL.COM
EXAM STUDY MATERIAL ONLINE TEST VIDEO MATERIAL
TEXT BOOK CLICK VIEW ATTEND CLICK VIEW
இலக்கிய வரலாறு CLICK VIEW ATTEND CLICK VIEW
GK CLICK VIEW ATTEND CLICK VIEW
CURRENT AFFAIRS CLICK VIEW ATTEND CLICK VIEW
TNPSC CLICK VIEW ATTEND CLICK VIEW
TET CLICK VIEW ATTEND CLICK VIEW
PG TRB CLICK VIEW ATTEND CLICK VIEW
POLICE CLICK VIEW ATTEND CLICK VIEW
NEET CLICK VIEW ATTEND CLICK VIEW
TELENT EXAM NMMS TRUST NTSE
TK WEBSITES THAMIZHKADAL.COM THAMIZHKADAL.IN STUDY MATERIALS

©THAMIZHKADAL

Monday, July 31, 2023

இந்தியாவில் eRupee அறிமுகம்.. இரூப்பி என்றால் என்ன? இதை எப்படி பயன்படுத்துவது?

அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை thamizhkadal.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்.

JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU


SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி


இந்தியாவின் இரூப்பி (eRupee) விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது. இ-ரூப்பியா..!

அப்படி என்றால் என்ன? இது என்ன செய்யும்? மக்கள் இதை எப்படி பயன்படுத்தலாம் என்பது போன்ற முக்கியமான தகவலை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.

இந்தியாவின் eRupee என்பது, டிஜிட்டல் ரூபாய் அல்லது டிஜிட்டல் ஐஎன்ஆர் (INR) அல்லது E-கரன்ஸி ரூபாய் (e-currency rupee) என்று அழைக்கப்படுகிறது. இது இந்திய ரூபாயின் டோக்கனைஸ் செய்யப்பட்ட டிஜிட்டல் பதிப்பாகும். இது இந்திய ரிசர்வ் வங்கியால், மத்திய வங்கி டிஜிட்டல் நாணயமாக வெளியிடப்பட்டு பயன்பாட்டிற்கு தற்போது அறிமுகம் செய்யப்படவுள்ளது.

டிஜிட்டல் ரூபாய் அல்லது டிஜிட்டல் நாணயம் என்பது காகிதப் பணத்தின் டிஜிட்டல் வடிவமாகும். இ-ரூபாய் மற்றும் ரொக்கப் பணத்தின் மதிப்பு இரண்டுமே சமமானது. உதாரணமாக, 1 டிஜிட்டல் ரூபாய் என்பது 1 ரூபாய் பணத்திற்கு சமம் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் பொருள், கிரிப்டோகரன்சியைப் போலன்றி, இ-ரூபாயின் மதிப்பு எப்போதும் ஏற்ற இறக்கமாக இருக்காது என்பதே ஆகும்.

இந்தியாவின் eRupee என்பது இந்திய ரிசர்வ் வங்கியால் மத்திய வங்கி டிஜிட்டல் நாணயமாக (CBDC) பரிவர்த்தனைக்கு பயன்படுத்தப்படும் டிஜிட்டல் முறை பணமாகும். இந்திய ரிசர்வ் வங்கி (RBI) விரைவில் UPI QR குறியீடுகள் மூலம் eRupee பணம் செலுத்த அனுமதிக்கும் என்று தெரிவித்துள்ளது. இப்போது இந்த முறை வளர்ச்சியில் உள்ளது.

eRupee வரிசையில், 1 ரூபாய், 2, 5, 10, 20, 50, 100, 200, 500, 2000 போன்ற பண மதிப்புகள் கிடைக்குமென்று கூறப்படுகிறது. தடையற்ற அனுபவத்திற்காக மக்கள் விரைவில் இனி UPI QR குறியீடுகள் மூலம் CBDC கட்டணங்களுடன் ஒருங்கிணைக்கப்பட்டு இந்த டிஜிட்டல் பணமுறையை பயன்படுத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது.

கடந்த வாரம் G20 நிகழ்வில், RBI பிரதிநிதிகள் UPI QR குறியீடுகள் மூலம் eRupee பணம் செலுத்துவது ஜூலை மாத இறுதியில் சாத்தியமாகும் என்று கூறியிருந்தது. இந்த செய்தியை தூர்தர்ஷன் தெரிவித்துள்ளது. UPI மூலம் CBDC பணம் செலுத்துவதற்கான அறிவிப்பு அடுத்த சில நாட்களில் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

CBDC -ஐ ஏற்கத் தேர்வு செய்யும் சில்லறை விற்பனையாளர்கள் தங்களின் தற்போதைய UPI QR குறியீடுகளைப் பயன்படுத்தி eRupee பணத்தை பெறலாம் மற்றும் பயன்படுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான தகவலின் படி, பாரத ஸ்டேட் வங்கி (State Bank Of India), பேங்க் ஆஃப் பரோடா (Bank of Baroda), ஐசிஐசிஐ வங்கி (ICICI Bank) போன்ற வங்கிகள் eRupee சேவையை ஆதரிக்கின்றன.

இதில் எச்டிஎப்சி (HDFC) வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி (Kotak Mahindra Bank) மற்றும் யெஸ் வங்கி (Yes Bank) ஆகியவை RBI உடன் நடந்து வரும் இந்த eRupee சோதனைகளில் பங்கேற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. பல வணிகர்கள் தற்போது CBDC இன் eRupee ஐ சோதனை செய்ய RBI -க்கு உதவுகின்றன. CBDC கள் கிரிப்டோகரன்சிகள் போல வேலை செய்கின்றன.

ஆனால் அவை நேரடியாக ஒழுங்குபடுத்தப்பட்டு ஒரு நாட்டின் மத்திய வங்கிகளால் வழங்கப்படுகின்றன என்பது இந்த இடத்தில் கவனிக்கத்தக்கது. டிசம்பர் 1, 2022 அன்று புது டெல்லி, பெங்களூரு, மும்பை மற்றும் புவனேஷ்வரில் eRupee க்கான சோதனைகள் தொடங்கப்பட்டன. RBI கவர்னர் சக்திகாந்த தாஸ், CBDCகள் இன்றைய உலகில் நாணயங்கள் பயன்படுத்தப்படும் விதத்தை அடிப்படையாக மாற்றும் என்று சமீபத்தில் கூறியிருந்தார்.

கிரிப்டோகரன்சி பயன்பாட்டின் உச்சக்கட்டத்தின் போது CBDCகளின் தேவை அதிகரித்ததாக கூறப்படுகிறது. ஏனெனில் நாடுகள் ஒழுங்குபடுத்தப்படாத பரிமாற்றங்களை முறியடிக்க முயன்றன. உத்தியோகபூர்வ CBDCகள் ரொக்கத்தைப் போலவே கட்டுப்படுத்தப்படுகின்றன, ஆனால் காகித நாணயத்தின் மீது குறைந்த சார்பு கொண்டவை என்று கூறப்பட்டுள்ளது. eRupee விரைவில் இந்தியாவில் களமிறக்கப்படும் என்று கூறப்படுகிறது. இனி மக்கள் அவர்களின் இ-வாலெட்டில் இ-ரூப்பி (eRupee) பணத்தை பயன்படுத்தலாம்.
Thamizhkadal Study Materials Websites Links Given Below:

WEBSITE 1 : CLICK HERE

WEBSITE 2 : CLICK HERE

WEBSITE 3 : CLICK HERE

No comments:

Post a Comment

பொதுச் செய்திகள்

6TH TO 9TH BRIDGE COURSE WORK BOOK & ALL WORK SHEET ANSWER KEY

CLASS

SUBJECTS

VIEW

9TH

TAMIL

CLICK

9TH

ENGLISH

CLICK

9TH

MATHS

CLICK

9TH

SCIENCE

CLICK

9TH

SOCIAL

CLICK

8TH

TAMIL

CLICK

8TH

ENGLISH

CLICK

8TH

MATHS

CLICK

8TH

SCIENCE TM

CLICK

8TH

SCIENCE EM

CLICK

8TH

SOCIAL

CLICK

7TH

TAMIL

CLICK

7TH

ENGLISH

CLICK

7TH

MATHS

CLICK

7TH

SCIENCE

CLICK

7TH

SOCIAL

CLICK

6TH

TAMIL

CLICK

6TH

ENGLISH

CLICK

6TH

MATHS

CLICK

6TH

SCIENCE

CLICK

6TH

SOCIAL

CLICK