Tuesday, August 8, 2023

டிரைவர் பணியிடம் டி.என்.பி.எஸ்.சி., வழியே நிரப்பணும்!

தற்போது அரசு போக்குவரத்துக் கழகங்களில், ஆயிரக்கணக்கான டிரைவர் மற்றும் கண்டக்டர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இப்பணியிடங்களுக்கான சேர்க்கை ஒளிவு மறைவின்றி, நேர்மையான முறையில் நடத்தப்படுமா என்ற சந்தேகம், இளைஞர்கள் மத்தியில் எழுந்துள்ளது. 

இதற்கு காரணம், இதற்கான அறிவிப்பை, டி.என்.பி.எஸ்.சி., அறிவிக்காததும், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், இதற்காக மிகப்பெரிய வசூல் வேட்டை தி.மு.க.,வினரால் நடத்தப்படுவதும்தான். தன் நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் அரசுக்கு உள்ளது. 

அரசு போக்குவரத்துக் கழகங்களில் உள்ள காலியிடங்களை, டி.என்.பி.எஸ்.சி., வழியே நிரப்ப, முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News