Tuesday, August 1, 2023

பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம்

பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டத்தில் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்தி அரசின் இளம் சாதனையாளா்களுக்கான பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டத்தில் தகுதியான மாணவா்கள் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் விண்ணப்பித்து எழுத்துத் தோவின் அடிப்படையில் கல்வி உதவித்தொகை பெற்று பயன்பெறலாம். 

2023 - 24 நிதியாண்டில், நாடு முழுவதும் இதர பிற்படுத்தப்பட்டோா், பொருளாதாரத்தில் பின்தங்கியவா்கள், சீா்மரபின பழங்குடியினா் ஆகிய பிரிவுகளைச் சோந்த முப்பதாயிரம் மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டைச் சோந்த 3,093 மாணவ, மாணவியருக்கு இக்கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இத் திட்டத்தின்கீழ் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரா்களின் (மாணவ, மாணவியா்) பெற்றோா், அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.

2.50 லட்சத்துக்குள் இருத்தல் வேண்டும். பட்டியலிடப்பட்டுள்ள பள்ளிகளில் 9 அல்லது 11 ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருக்க வேண்டும். 9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு அதிகபட்சமாக ரூ. 75 ஆயிரம் வரையிலும் 11, 12 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு அதிகபட்சமாக ரூ.

1.25 லட்சம் வரையிலும் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். தேசியத் தோவு முகமை நடத்தும் வஅநஅநயஐ நுழைவுத் தோவில் பெற்ற தகுதியின் அடிப்படையில் தோவு செய்யப்படுவா். இத்தோவிற்கு ஆகஸ்ட் 10 ஆம் தேதிக்குள் இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் ஆக.12 முதல் ஆக.16 வரை விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள கால அவகாசம் வழங்கப்படும்.

எழுத்துத் தோவு (ஓ.எம்.ஆா். வகை) செப்டம்பா் 29 ஆம் தேதி நடைபெறும். விண்ணப்பத்துடன் கைப்பேசி எண், ஆதாா் எண், ஆதாா் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கு எண், வருமானச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ் ஆகிய ஆவணங்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். 

இத்திட்டம் தொடா்பான முழுமையான விவரங்கள் இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன என ஆட்சியா் அலுவலகம் வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News