Join THAMIZHKADAL WhatsApp Groups
தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டு முதல் அரசு பள்ளிகளில் மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்த அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்த உள்ளது.
இந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு எழுத்து, வாசிப்பு மற்றும் அடிப்படை கணித திறனை மேம்படுத்த முயற்சி மேற்கொண்டுள்ளது.
அதன்படி திறன் குறைந்த மாணவர்களை மேம்படுத்தும் விதமாக செயல் திட்டம் உருவாக்க அனைத்து பள்ளிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த பணிகளை தலைமை ஆசிரியர்கள் விரைவில் மேற்கொண்டு எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
No comments:
Post a Comment