Search This Blog

Friday, December 27, 2024

அண்ணா பல்கலைக்கழக மாணவியின் புகார் பெறப்பட்டது குறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் விளக்கம்

0 comments

அண்ணா பல்கலைக்கழக மாணவியின் புகார் பெறப்பட்டது குறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் விளக்கம்

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த குற்றம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி காவல்துறை அவசர உதவி எண் 100 க்கு நேரடியாக தொடர்பு கொண்டு புகார் அளித்தார்.

அதன் அடிப்படையில் விசாரணை நடத்த வந்த காவல்துறையினரிடம் அண்ணா பல்கலைக்கழகத்தின் (POSH Prevention of Sexual Harrasment Committee) உள் விசாரணை குழுவினைச் சேர்ந்த ஒரு பேராசிரியரின் உதவியோடு பாதிக்கப்பட்ட பெண் நடந்த விவரங்களை சொல்லி புகார் அளித்திருந்தார்.

காவல்துறையினர் பல்கலைக்கழகத்திற்கு வந்து விசாரணை செய்யும் போதுதான் இந்த சம்பவம் தொடர்பாக POSH குழுவில் இருந்த மற்றவர்களுக்கு இந்த பிரச்சனை தெரியவந்துள்ளது. அதை வைத்துதான் POSH குழு நேரடியாக புகார் அளிக்கவில்லை என தெரிவித்திருந்தேன். அது அமைந்துவிட்டது.

No comments:

Post a Comment