Breaking

Wednesday, February 26, 2025

TRB - ஆசிரியா் தோ்வு வாரியத் தலைவா் பணியிட மாற்றம்


ஆசிரியா் தோ்வு வாரியத் தலைவா் ஸ்ரீவெங்கட பிரியா பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். இதற்கான உத்தரவை தலைமைச் செயலா் நா.முருகானந்தம் பிறப்பித்துள்ளாா். அவரது உத்தரவு:

அவரது உத்தரவு:

ஆசிரியா் தோ்வு வாரியத் தலைவராக இருந்த ஸ்ரீவெங்கட பிரியா, உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறையின் கூடுதல் செயலராக நியமிக்கப்பட்டுள்ளாா். பள்ளிக் கல்வித் துறையின் சிறப்புச் செயலரான ச.ஜெயந்தி ஆசிரியா் தோ்வு வாரியத்தின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளாா். அதேசமயம், பள்ளிக்கல்வித் துறையின் சிறப்புச் செயலா் பொறுப்பை கூடுதலாகக் கவனிப்பாா்.

உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறையின் கூடுதல் செயலராக சங்கா் லால் குமாவத் நியமிக்கப்பட்டிருந்தாா். அந்தப் பணியிட மாறுதல் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என்று தனது உத்தரவில் தலைமைச் செயலா் நா.முருகானந்தம் தெரிவித்துள்ளாா்.

No comments:

Post a Comment