Breaking

Sunday, November 2, 2025

அரசுக்கு எதிராக சமூக வலைதளத்தில் கருத்து - தலைமை ஆசிரியர் பணி இடை நீக்கம்


திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ஒன்றியம் காளச முத்திரம் பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இப் பள்ளியில் தலைமை ஆசிரியராக அருள் அரசன் என்பவர் பணியாற்றி வந்தார். இவர் அரசுக்கு எதிரான கருத்துக்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து சமூக வலைதளத்தில் அரசுக்கு எதிரான கருத்துக்களை பதிவிட்ட அரசு பள்ளி தலைமை ஆசிரியர் அருள்அரசனை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமிமுத்தழகன் உத்தரவிட் டார்.

No comments:

Post a Comment