Breaking

Saturday, January 24, 2026

சுவாசத்தை அடக்கி ஆளும் சூட்சுமம்


*சூரிய கலை&சந்திர கலை*

நாம் நமது இரண்டு நாசித் துவாரங்களின் வழியாகவும் ஒரே நேரத்தில் சுவாசிப்பதாக ஒரு தவறான கருத்து நம்மிடையே உள்ளது.
உங்களது சுவாசத்தை உற்றுக் கவனித்துப் பாருங்கள்.
ஒரு நேரத்தில் ஒரு நாசியின் வழியாகவே அதிகப்படியான காற்று உள்ளே செல்லும். (அடுத்த நாசியில் மிகச் சிறய அளவிலான காற்று உட்புகும்.)
சற்று நேரத்திற்குப்பின் (இரண்டு மணி நேரத்திற்குப் பின்) அடுத்த நாசி வழியாக காற்று செல்லத் துவங்கும்.
இவ்வாறு ஒரு நாளில் இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை என மொத்தம் 12 முறை இந்த இடம் மாறுதல் நடைபெறும்.
எந்த நேரத்தில் எந்த நாசியில் காற்று செல்லும் என்பதையும் நம் முன்னோர்கள் கணித்து வைத்துள்ளனர்.
*நாசியின் வழியாக சுவாசிக்கும் நேரம்:*
காலை 6-8 மணி வரை வலது நாசி
காலை 8-10 மணி வரை இடது நாசி
காலை 10-12 மணி வரை வலது நாசி
மதியம் 12-2 மணி வரை இடது நாசி
மதியம் 2-4 மணி வரை வலது நாசி
மாலை 4-6 மணி வரை இடது நாசி
மாலை 6-8 மணி வரை வலது நாசி
இரவு 8-10 மணி வரை இடது நாசி
இரவு 10-12 மணி வரை வலது நாசி
இரவு 12-2 மணி வரை இடது நாசி
இரவு 2-4 மணி வரை வலது நாசி
அதிகாலை 4-6 மணி வரை இடது நாசி
வலது நாசியின் வழியாக உள்ளே செல்லும் காற்றிற்கு சூரிய கலை என்றும்; இடது நாசியின் வழியாக உள்ளே செல்லும் காற்றிற்கு சந்திர கலை என்றும் நமது முன்னோர்கள் பெயர் சூட்டியுள்ளனர்.
இந்த இரண்டு சுவாசங்களுக்கும் தனித்தனிப் பண்புகளும் வெவ்வேறு வகையான செயல்பாடுகளும் உள்ளன.
*வலது நாசிக் காற்று*
*சூரிய கலை*
உடலுக்குத் தேவையான வெப்ப சக்தியைத் தருகின்ற பிராணன் இதுவே.
வலது நாசியின் வழியாக சுவாசம் நடைபெறும் காலகட்டத்தில் உடலின் வெப்ப நிலை சற்றே உயரும்.
உடல் சுறுசுறுப்படையும்; சோர்வு அகலும். உடலின் வலிமை அதிகரிக்கும். மூளையும் உடலும் பரபரப்பாக இயங்கும்.
இந்த இரண்டு மணி நேரத்தில் நிதானம் குறைவாகவும், வேகம் அதிகமாகவும் இருக்கும்.
*இடது நாசிக் காற்று*
*சந்திர கலை*
உடலைக் குளிர்விக்கும் தன்மை கொண்டது. சந்திரனைப் போன்றே இந்த மூச்சுக் காற்றும் குளுமையானதாகும்.
இடது நாசி வழியே சுவாசம் நடைபெறும் வேளையில் உடலின் வெப்ப நிலை சற்றே குறைந்து, உடல் குளிர்ச்சியடையும்.
பரபரப்புத் தன்மை குறைந்து, மனதிலும் உடலிலும் ஒரு சாந்தத் தன்மை உருவாகும். மூளை அமைதியாக சிந்திக்கத் துவங்கும். அவசரத் தன்மை மறைந்து, நிதானமான மனநிலை நிலவும்.
இந்த இரண்டு வகையான மூச்சுகளையும் (குதிரைகளையும்) அடக்கி ஆளக் கற்றுக் கொண்டால், மனம், ஐம்பொறிகள், பருவுடல் ஆகிய அனைத்துமே நம் கட்டுப்பாட்டிற்குள் வரும்.
மூளை அமைதியாக சிந்திக்கத் துவங்கும். அவசரத் தன்மை மறைந்து, நிதானமான மனநிலை நிலவும்.
மனம் நம் கட்டுப்பாட்டிற்குள் வரும்.
சிதம்பரம் & மதுரை நடராஜர் உணர்த்தும் தத்துவங்கள்
சிதம்பரம்: சூரிய. கலையை உணர்த்துகிறது.
வலது பக்கம் மூச்சு
வலது கால் ஊன்றி நடனம்
மதுரை:சந்திர கலையை உணர்த்துகிறது
இடது பக்கம் மூச்சு
இடது கால் ஊன்றி நடனம்
மேலே குறிப்பிடபட்டுள்ள சூரிய கலைக்குரிய நேரங்களில் சிதம்பரம் நடராஜரை தரிசனம் செய்வதாலும்,
சந்திர கலைக்குரிய நேரங்களில் மதுரை நடராஜரை தரிசனம் செய்வதாலும்,
நடராஜப் பெருமானின் இந்த இரு விக்ரஹங்களும் நமது சுவாசம் சம்பந்தப்பட்ட சூரிய கலை மற்றும் சந்திர கலைகளை மேம்படுத்தும் ஆற்றலை நமக்கு எளிதாக கிடைக்க உதவுவதுடன் நமது
சுவாசத்தை அடக்கி
ஆளக் கற்றுக் கொள்ளவும்
எளிதில் உதவுகிறது என்பதே
சிதம்பரம் & மதுரை நடராஜர் தாண்டவங்கள் நமக்கு உணர்த்தும் சூட்சும ரகசியமாகும்
எனவே இந்த இரு நடராஜ தரிசனங்கள் மூலம் நமது
மனம், ஐம்பொறிகள், பருவுடல்
ஆகிய அனைத்துமே நம் கட்டுப்பாட்டிற்குள் வரும் என்பதையும் நன்கு புரிந்து கொள்ளுங்கள்.



No comments:

Post a Comment