ஆதார் மட்டும் போதாது PAN விண்ணப்பத்திற்கு...

ஆதார் மட்டும் போதாது PAN விண்ணப்பத்திற்கு...

ஏப்ரல் 1 முதல் PAN கார்டு பெறும் விதிகளில் முக்கிய மாற்றம் அமலுக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதிய விதிகளின்படி, ஆதார் கார்டு மட்டும் பயன்படுத்தி PAN கார்டுக்கு விண்ணப்பிக்க முடியாது. பிறப்பு தேதி உள்ளிட்ட தகவல்களை உறுதிப்படுத்த கூடுதல் ஆவணங்கள் கட்டாயமாக்கப்படுகின்றன.

இதற்காக பிறப்பு சான்றிதழ், வாக்காளர் அட்டை, 10ஆம் வகுப்பு சான்றிதழ், ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் போன்ற ஆவணங்கள் தேவையாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை ஆதார் அடிப்படையில் எளிதாக PAN பெறும் நடைமுறை இருந்த நிலையில், புதிய விதி மூலம் சரிபார்ப்பு நடைமுறை கடுமையாக்கப்படுகிறது.
Share:

No comments:

Post a Comment

Categories

Total Pageviews

Thamizhkadal WhatsApp Channel