பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க நாளை கடைசிநாள்.
தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசிநாள்.
பொறியியல் படிப்பில் சேர்வதற்கான கலந்தாய்வுக்கான விண்ணப்பப்பதிவு கடந்த 3ஆம் தேதி தொடங்கியது.
பொறியியல் படிப்பு கலந்தாய்வுக்கு இணைய வழி மூலம் இதுவரை 2.81 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.
2.17 லட்சம் பேர் கட்டணம் செலுத்தியுள்ள நிலையில் அவர்களில் 1.84 லட்சம் பேர் சான்றிதழ்களை பதிவேற்றியுள்ளனர்.
பொறியியல் கலந்தாய்வுக்கான ரேண்டம் எண் 5ஆம் தேதி வெளியீடு; ஆவணங்களை சமர்ப்பிக்க 6 வரை அவகாசம்.
ஜூன் 8 முதல் 20 வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு 29ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியாகிறது.





No comments:
Post a Comment