Wednesday, July 8, 2026

உயர்கல்வி பயில விரும்பும் மாணவர்கள் வங்கிகளில் இலட்சம் வரை பிணையம் இல்லாமல் கடன் பெறு வழிகாட்டுதல் வெளியீடு.

தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.இரா.வைத்திநாதன், இ.ஆ.ப., அவர்கள் செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது,



தேனி மாவட்டத்தில் உயர்கல்வி பயில விரும்பும் மாணவர்கள் வங்கிகளில் இலட்சம் வரை பிணையம் இல்லாமல் கடன் பெறுவதற்கு https://pmvidyalaxmi.co.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும்பொழுது மாணவர்களின் ஆதார்அட்டை, கல்லூரி சேர்க்கை கடிதம், கல்வி கட்டணம், 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், வங்கி கணக்குப் புத்தகம், பெற்றோர்களின் வருமானச் சான்றிதழ் மற்றும் பெற்றோர்களின் ஆதார் அட்டை, வருமான வரி அட்டை, வங்கி கணக்கு புத்தகம் ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும், மாணவர்கள் மூன்று வங்கிகளில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.இரா.வைத்திநாதன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், தேனி.

No comments:

Post a Comment