"சொத்து மற்றும் கடன் விவரங்களை தாக்கல் செய்வதற்கான வசதி தற்போது IFHRMS போர்ட்டலில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த முறை விதிமீறல்களைக் கண்காணிப்பதை எளிதாக்கும்," என்று உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சமீபத்தில் அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில், டிசம்பர் 31, 2025-வுடன் முடிவடையும் காலண்டர் ஆண்டிற்கான சொத்து விவர அறிக்கைகளை, அக்டோபர் 31, 2026-க்குள் தாக்கல் செய்ய ஊழியர்களுக்கு அறிவுறுத்துமாறு செயலாளர்கள், துறைத் தலைவர்கள், மாவட்ட ஆட்சியர்கள், நீதிபதிகள், TNPSC செயலாளர் மற்றும் சென்னை உயர் நீதிமன்றப் பதிவாளர் ஆகியோருக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
சொத்து விவரம் தாக்கல் செய்யப்பட்ட தேதி ஊழியரின் 'ஆண்டு ரகசிய அறிக்கையில்' (Annual Confidential Report) பதிவு செய்யப்படும். குறிப்பிட்ட காலத்திற்குள் அறிக்கையை சமர்ப்பிக்கத் தவறினால், அது சேவை நடத்தை விதிகளின் மீறலாகக் கருதப்படும்.