தேசிய தொழில்நுட்ப கல்வி மையமான என்.ஐ.டி. நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வருகிறது. கேரள மாநிலம் கோழிக்கோட்டில் செயல்படும் என்.ஐ.டி. கல்வி மையத்தில் டெக்னிக்கல் ஸ்டாப் பணிக்கு 125 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
சிவில், கெமிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் போன்ற பிரிவில் டிப்ளமோ மற்றும் பி.இ., பி.டெக் படித்தவர்களுக்கு பணி உள்ளது. பி.எஸ்.சி., எம்.எஸ்சி. அறிவியல் படிப்பு படித்தவர்கள், எம்.சி.ஏ. படித்தவர்கள், பைன்ஆர்ட், ஆர்கிடெக்சர் போன்ற படிப்புகளை படித்தவர்களுக்கும் பணிகள் உள்ளன. நேர்காணல் அடிப்படையில் இந்த பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
அந்தந்த பணிக்கான காலியிட விவரம், கல்வித்தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை இணையதளத்தில் பார்க்கலாம். விருப்பமுள்ளவர்கள் குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றுகளுடன் நேர்காணலில் ஆஜராகலாம். இது பற்றிய விவரங்களை http://www.nitc.ac.in/ என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.