Search This Blog

Monday, August 20, 2018

தனித்தேர்வர்கள் தமிழ்வழிச் சான்றிதழ் பெறுவது எப்படி?

0 comments
பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வினை பள்ளியின் மூலம் எழுதாமல் தனியாராக (பிரைவேட்டாக) எழுதியவர்கள் தங்களது தமிழ் வழி சான்றிதழை சென்னையில் உள்ள பள்ளிக் கல்வித் துறையிடம் இருந்து பெற வேண்டும்.

நீங்கள் எந்த ஊரில் இருந்தாலும் உங்களது பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழின் ஒளிப்பிரதி (SSLC Mark Sheet Xerox) / உங்கள் பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழின் ஒளிப்பிரதி (HSC Mark Sheet Xerox) மற்றும் உங்கள் மாற்றுச் சான்றிதழின் ஒளிப்பிரதி (TC Xerox) ஆகியவற்றுடன் ஒரு வெள்ளைத்தாளில் விண்ணப்பக் கடிதத்தையும் அனுப்ப வேண்டும்.



10 நாட்களுக்குள் உங்களுக்கான தமிழ் வழி சான்றிதழ் நீங்கள் பகிர்ந்துள்ள முகவரிக்கு அனுப்பப்படும்.

நீங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் சான்றிதழ் சரி பார்ப்பு அல்லது கலந்தாய்விற்குத் தேர்வு செய்யப்பட்டு இருந்தால் அந்த குறிப்பாணையின் ஒளிப்பிரதியையும் ( CV or Counselling Memo) இணைத்து அனுப்பலாம்.

அனுப்ப வேண்டிய முகவரி:



Director of Government Examination,
DPI campus,
College Road,
Nungampakkam,
Chennai - 600 034.

Ph: 044-2827 8286, 044-2822 1734.
email: dgedirector@gmail.com
Web: www.tn.gov.in/dge