Tuesday, October 23, 2018

படிப்பை பாதியில் விட்ட மாணவி சிவரஞ்சனி மற்றும் அவரது சகோதரர் ஹரிபிரசாந்தின் படிப்பு செலவை அரசே ஏற்கும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு





சத்தியமங்கலம் அருகே படிப்பை பாதியில் விட்ட மாணவி சிவரஞ்சனி மற்றும் அவரது சகோதரர் ஹரிபிரசாந்தின் படிப்பு செலவை அரசே ஏற்கும்
என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

கடந்த 21-ம் தேதி சிவரஞ்சனி குறித்த செய்தியை தொலைக்காட்சியில் பார்த்ததாக தெரிவித்த முதலமைச்சர், சிவரஞ்சனி தொடர்ந்து கோவை அரசு கலைக் கல்லூரியில் படிப்பதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சிவரஞ்சனியின் சகோதரர் ஹரிபிரசாத்தும் தாளவாடி உண்டு உறைவிடப் பள்ளியில் படிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.