இந்திய விமானப் படையில் 163 அதிகாரி பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு

இந்திய விமானப் படையில் தொழில்நுட்ப பிரிவு, கிரவுண்ட் ட்யூட்டி பிரிவு உள்ளிட்ட மொத்தம் 163 பணியிடங்களுக்கு வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.











பறக்கும் பிரிவிற்காக விண்ணபிப்பவர்கள் 20 முதல் 24 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். விமான பயிற்சி பெற்றவர்களில் 26 வயது நிரம்பியவர்கள் விண்ணப்பிக்கலாம். தொழில்நுட்பம் மற்றும் கிரவுண்ட் டியூட்டி பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் 20 வயது முதல் 26 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல இந்த பணியிடங்களில் பறக்கும் பிரிவுக்கு விண்ணப்பிப்போர் 3 ஆண்டு கால பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.





குறைந்தது 60 சதவீத மதிப்பெண்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் உள்ளிட்ட தொழில்நுட்ப பிரிவுகளில் பணியாற்ற அதற்குரிய பொறியியல் பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இதுதவிர, பல்வேறு பிரிவுகளில் இளங்கலை, முதுநிலை, முதுநிலை டிப்ளமா, சிஏ படித்தவர்கள் கிரவுண்ட் ட்யூட்டி பிரிவுக்கு விண்ணப்பிக்கலாம் என இந்திய விமானப் படை வேலைவாய்ப்பு பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது. அஃப்கேட் தேர்வு, உடல் திறன் தேர்வு, நேர்காணல் ஆகிய படிநிலைகள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். குறிப்பிட்ட கால பயிற்சிக்குப் பின் அவர்கள் பணி நிரந்தரம் வழங்கப்படும்.





இதில் விண்ணப்பிக்க விரும்புவோர் தேர்வு கட்டணமாக ரூ. 250 செலுத்த வேண்டும். இந்திய விமானப் படைக்கான வேலைவாய்ப்புகளில் பணியாற்ற விருப்பமும், தகுதியும் பெற்றிருந்தால், உடனே ஆன்லைன் முறையில் விண்ணப்பிகலாம். இதற்கான கடைசி தேதி டிசம்பர் 30, 2018. மேலும் விவரங்களுக்கு, https://careerindianairforce.cdac.in/, https://afcat.cdac.in/AFCAT/ ஆகிய இணையதளத்தை பார்க்கவும்
Share:

Total Pageviews

Categories

Thamizhkadal WhatsApp Channel