29,000 பிளஸ் 1 மாணவர்களுக்கு மாற்று சான்றிதழ் வழங்கியது குறித்து பதிலளிக்க தேர்வுத்துறை நோட்டீஸ்






11ம் வகுப்பில் தோல்வி அடைந்தாலும், 12ம் வகுப்பை தொடரலாம் என அரசாணை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்நிலையில், தேர்சி பெறாத 29 ஆயிரம் பிளஸ் 1 மாணவர்களுக்கு மாற்று சான்றிதழ் வழங்கியது ஏன் என்பது குறித்து சம்பத்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதிலளிக்க வேண்டும் என தேர்வுத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.





மேலும் மாற்று சான்றிதழ் வழங்கிய மாணவர்கள் வேறு பள்ளிகளில் சேர்ந்தார்களா என்பது குறித்தும் பதிலளிக்க முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
Share:

Total Pageviews

Categories

Thamizhkadal WhatsApp Channel