Wednesday, December 26, 2018

இடைநிலை ஆசிரியர்கள் ஜன., 7ம் தேதி வரை போராட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் : கல்வித்துறை இயக்குனர் கோரிக்கை

ஊதிய முரண்பாடுகளை நீக்க வலியுறுத்தி சென்னையில் 3வது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 





தொடக்க கல்வித்துறை இயக்குனர் கருப்பசாமி, இடைநிலை ஆசிரியர் சங்க பொதுச்செயலாளர் ராபர்ட் மற்றும் நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் சுமூக முடிவு எட்டப்படவில்லை. இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் இடைநிலை ஆசிரியர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்துள்ளார். 





இதுகுறித்து பேசிய தொடக்க கல்வித்துறை இயக்குனர் கருப்பசாமி, சித்தக் குழு அறிக்கையை பொருத்தே நடவடிக்கை எடுக்க முடியும் என்பதால் ஜன., 7ம் தேதி வரை போராட்டத்தை ஒத்திவைக்க வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment

Recent Story

Featured News

Back To Top