Monday, December 24, 2018

சம ஊதியம் கேட்டுப்போராடும் இடைநிலை ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கை வெல்லட்டும்: கல்வியாளர் சங்கமம்







சென்னையில் கூடிநிற்கும் இடைநிலைஆசிரியர்கள்

கூடுதல் ஊதியம் கேட்கவில்லை. சலுகைகள் கேட்கவில்லை.

ஒரு பணிக்கு இரண்டு ஊதியம் கூடாது என்று சமஊதியம் கேட்டு நியாயமாகப்
போராடும் இடைநிலை ஆசிரியர்களை போராட்டத்திற்கு தள்ளாமல், உத்தரவாதம் அளித்து, முதலமைச்சரும்,கல்விஅமைச்சரும்
உடனே தீர்வு காணவேண்டும்.

இது நம் பிரச்சினை அல்ல என
எவரும் ஒதுங்கி நிற்காமல், ஆதரவுக்குரல் கொடுக்க வேண்டும்.





கல்வி சார்ந்த விவரங்களை உடனுக்குடன் அறிய இணைந்திடுவீர் Click Download

ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பணப்பலன்கள்,
பணிப்பயன்கள் எல்லாவற்றிலும் பாகுபாடு காண்பித்து, ஆசிரியர்களைப் பிரித்தாளும் சூழ்ச்சிக்குப் பலியாகாமல், அனைத்து சங்கங்கங்களும் ஒன்றுபட்டு நின்று ஊதிய வேற்பாடுகளை களைந்து ஒரு பணிக்கு ஒரே ஊதியம் வழங்க வேண்டும் என்னும் ஒற்றைக் கோரிக்கையோடு ஒன்றுபட வேண்டும்.





எல்லாப் பிரச்சினைகளுக்கும் போராடித்தான் தீர்வு பெற வேண்டுமென்றால்,
நியாயம் என்பதன் அர்த்தம் என்ன?
அரசு என்பது தனது ஊழியர்களைப் பாதுகாக்க வேண்டுமே தவிர, ஒவ்வொரு முறையும் அவர்களை தெருவில் நிறுத்தி வேடிக்கைப் பார்க்கக்கூடாது.
நியாயம் வெல்லட்டும்.




No comments:

Post a Comment