Join THAMIZHKADAL WhatsApp Groups


2012 ஆம் ஆண்டு துப்புரவு பணியாளர்கள் தொகுப்பூதியத்தில் ஊதியத்தில் நியமிக்கப்பட்டிருந்தனர், அப்பணியிடத்தினை காலமுறை ஊதியம் ஆக மாற்றி தரும்படி 2014 -ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டு அந்த வழக்கில் 2018 -ஆம் ஆண்டு 4 ஆண்டு கழித்து தீர்ப்பு வந்துள்ளது அந்த தீர்ப்பை எதிர்த்து அரசு மேல்முறையீடு செய்தது, அந்த மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்ட காரணத்தினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டு தற்போது நீதிமன்ற தீர்ப்பு வெளியான நாள் முதல் காலமுறை ஊதியத்தில் பணப்பலன்களைப் பெற்றுத் தருமாறு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.