பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது? - அமைச்சர் செங்கோட்டையன் பதில்

பொதுத்தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட தேதியில், அறிவிக்கப்பட்ட நேரத்தில் வெளியாகும் என்றுதமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.



ஈரோடு கோபிசெட்டிபாளையம் அருகே இன்று செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த அவர், "பொதுத்தேர்வு முடிவுகள் ஏற்கனவே அறிவித்தபடி வெளியாகும். அதாவது,தமிழக பள்ளிக்கல்வித்துறையால் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேதியில்,அறிவிக்கப்பட்ட நேரத்தில் வெளியாகும். இந்த வருடம் 8, 10,12ம் வகுப்புகளுக்கு புதிய புத்தங்கள் வழங்கப்படவுள்ளன. அதன்படி,புதிதாக மாற்றி அமைக்கப்பட்டபுத்தகங்கள் பள்ளி திறக்கும் நாளில் மாணவர்களுக்கு வழங்கப்படும்" என்று தெரிவித்தார்.
Share:

Total Pageviews

Categories

Thamizhkadal WhatsApp Channel