Thursday, May 30, 2019

இலவச கல்வி திட்டத்தை அறிவித்தார் எம்.பி. பாரிவேந்தர்


தேர்தல் பரப்புரையின் போது அளித்த வாக்குறுதியின் படி இலவச கல்வி திட்டத்தை எம்.பி. பாரிவேந்தர் அறிவித்தார். எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனத்தில் இலவச உயர்கல்வி வழங்கும் திட்டத்தை அறிவித்தார். பெரம்பலூரில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் 50 மாணவர்கள் வீதம் 300 பேர் இந்த திட்டம் மூலம் பயன்பெறலாம் எனவும் தெரிவித்துள்ளார்