Sunday, June 9, 2019

மத்திய அரசு நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கு 45 ஆயிரம் சம்பளத்தில் வேலை


இபிஎஃப்ஓ (EPFO) எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில், அசிஸ்டெண்ட் பணிக்கான தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.



பணிகள்:
அசிஸ்டெண்ட் பணி

மொத்த காலியிடங்கள்: 280

முக்கிய தேதிகள்:
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கிய தேதி: 30.05.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.06.2019
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்ய கடைசி தேதி: 10.07.2019
ஆன்லைனில் தேர்வுக்கட்டணம் செலுத்த கடைசி தேதி: 25.06.2019



வயது வரம்பு:
குறைந்தபட்சமாக 20 வயது பூர்த்தி அடைந்தவர்களும், அதிகபட்சமாக 27 வயதுநிரம்பாதவர்களும் இதற்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வுக்கட்டணம்:
எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் / மாற்றுத்திறனாளிகள் / பெண்கள் / துறையில் பணிபுரிவோர் / EWS - ரூ.250
மற்ற பிரிவினர் / ஆண்கள் - ரூ.500

ஊதியம்:
தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவோர்க்கு, ரூ.44,900 தொடக்க மாத ஊதியமாக வழங்கப்படும்.

கல்வித்தகுதி:
குறைந்தபட்ச கல்வித்தகுதியாக, அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டம் பெற்றிருத்தல் வேண்டும்.







விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில், https://ibpsonline.ibps.in/epfoamay19/ - என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யலாம்.

தேர்வு முறைகள்:
1. முதல் நிலை தேர்வு
2. முதன்மை தேர்வு போன்ற இரு தேர்வு முறைகள் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

மேலும், இது குறித்த முழு தகவல்களைப் பெற,https://www.epfindia.gov.in/site_docs/PDFs/Updates/Exam_RR_Assistan_51.pdf &https://www.epfindia.gov.in/site_docs/PDFs/Updates/Add-Exam_RR_Assistan_51.pdf -என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்.