Tuesday, June 25, 2019

இடைநிலை ஆசிரியர்கள் , முதுகலைப்பட்டாதாரி ஆசிரியராக ஓர் நல்வாய்ப்பு!

2009 க்கு பிறகு பணியேற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு..முதுகலைப்பட்டாதாரி ஆசிரியர் தேர்வு நல்வாய்ப்பு

அடிப்படை ஊதியம் 36900
மொத்த ஊதியம் ₹45000

2009 க்கு முன் பணியேற்றவர்கள் தேர்ச்சி பெற்றால்..

தற்போது அவர்கள் வாங்கும் சம்பளத்தை விட சுமார் 15000 குறைவாக பெறுவார்கள்...

தொடக்க கல்வியை விட்டு பள்ளிக்கல்வித்துறைக்கு... செல்ல விரும்பினால் தாரளாமாக எழுதலாம்

2009 க்கு பின் பணியேற்றவர்களில் அதிகம்...
*கணிதம்ஆங்கிலம்* மட்டுமே பயின்றுள்னர்...
போட்டி அதிகமாக இருக்கும்



*இடைநிலை ஆசிர்யர்களுக்கு ஒதுக்கீட்டு இடங்கள்*

*கணிதம் 28
ஆங்கிலம் 23
தமிழ் 32
வரலாறு 10
வேதியியல் 36
இயற்பியல் 21
தாவரவியல் 15
வணிகவியல் 10
பொருளியல் 21*

இந்த காலிப்பணியிடம் இல்லாமல் பொதுப்போட்டியிலும் நீங்கள் வெற்றி பெறலாம்.

தகுதிமதிப்பெண்..
BC...75 / 150
SC. 68 /150
ST. 60 / 150

சென்ற முறை நடைபெற்ற தேர்வில் தகுதி மதிப்பெண் கூட பெற முடியாமல் சுமார் 500 க்கும் மேற்ப்பட்ட இடங்கள் நிரப்படாமல் இருந்தது...


2009 க்கு பிறகு பணியேற்றவர் களில் மற்ற பாடங்களான தமிழ்,வரலாறு,வேதியியல் படித்தவர்கள் மிகவும் குறைவு...
இப்பாடப்பிரிவிற்கு போட்டிக் குறைவு



தேர்வு எழுதுவதற்கு வயது வரம்பு இல்லை....58 பூர்த்தியாகும் வரை எழுதலாம்..

முதுகலைப் பட்டதாரி தேர்விற்கு விண்ணப்பம் செய்தவுடன் ...அலுவலகத்தில் இரண்டு செட் விண்ணப்பம் கொடுக்கவும்...

மொத்தக் காலிப்பணியிடங்களில் 10 % இடைநிலை ஆசிரியர்களுக்கு இட ஒதுக்கீடு உண்டு்.

துறை அனுமதி அவசியம்.



இடைநிலை ஆசியர்கள் முதுகலைப் பட்டதாரியாக நல்வாழ்த்துக்கள்.