Wednesday, October 30, 2019

கல்லாதோருக்கு எழுத்தறிவு வழங்க பள்ளிக்கல்வித்துறை சிறப்பு திட்டம்.

கல்லாதோருக்கு எழுத்தறிவு வழங்கும் சிறப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்துகிறது பள்ளிக்கல்வித்துறை. இது தொடர்பான முக்கிய அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.
அதன்படி,
விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் 1,68,716 கல்லாதோருக்கு எழுத்தறிவு வழங்க சிறப்பு திட்டம். 2 மாவட்டங்களிலும் சிறப்பு மையம் அமைத்து 2 ஆண்டுகளுக்கு வகுப்புகள் நடத்த 6.23 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
100 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தி கல்லாதோர் தேர்வு செய்யப்படுவார்கள் எனவும் பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.
இதற்காக தொகுப்பூதியத்தில் சிறப்பாசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.