இரயில்வேயில் உதவித் தொகையுடன் கூடிய பயிற்சிக்கு மாபெரும் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு


தெற்கு இரயில்வேயில் இருந்து தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் உதவித் தொகையுடன் கூடிய பயிற்சிக்காக பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதால், இந்த காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.




காலிப் பணியிடங்கள் : 3500+

கல்வித் தகுதி :
Fresher - பத்தாம் வகுப்பில் 50% மதிப்பெண்களோடு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
MLT - பன்னிரெண்டாம் வகுப்பில் அறிவியல் குழுவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
Ex-ITI - ITI-யில் தேர்ச்சி

வயது வரம்பு :

Freshers : 15 முதல் 22 வயது வரை
Ex-ITI, MLT : 15 முதல் 24 வயது வரை
அரசு விதிமுறை படி வயது வரம்பில் சலுகைகள் கொடுக்கப்படும்.

விண்ணப்பக்கட்டணம் : ரூ. 100 செலுத்த வேண்டும்.
SC/ST, மாற்று திறனாளிகள், பெண்களுக்கு விண்ணப்பக்கட்டணம் இல்லை.




விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலமாக https://iroams.com/Apprentice/recruitmentIndex விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை http://bit.ly/35VADpg பார்த்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 31.12.2019 மாலை 5.00 மணி வரை
Share:

Total Pageviews

Categories

Thamizhkadal WhatsApp Channel