Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, July 23, 2020

தமிழகம் முழுவதும் ஜூலை 24ஆம் தேதி முதல் - முக்கிய அறிவிப்பு ..!!


தமிழகம் முழுவதும் கடந்த வாரம் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டது. உயர்கல்வி செல்ல வேண்டும் என்ற கனவுகளோடு இருந்த மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் தேர்வு முடிவுகள் வெளியாகிய நிலையில், தற்போது அரசு தேர்வு துறை இயக்ககம் இது சார்ந்த ஒரு அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.

பிளஸ் டூ மாணவர்கள் மறு மதிப்பீடு மற்றும் மறு கூட்டலுக்கு வருகிற 24-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய மையமாகங்கள் வழியாகவும் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment