Search This Blog

Monday, August 24, 2020

பத்தாம் வகுப்பு மாணவச் செல்வங்களுக்கான இயங்கலைத் தேர்வு (இயல் 3) அறிவிப்பு

0 comments

பத்தாம் வகுப்பு மாணவர்களின் கல்வி அடைவைச் சோதிக்கும் வகையிலும்,அவர்களது கற்றலை ஊக்கப்படுத்தும் வகையிலும் தமிழ்ப்பொழில் வலைதளத்தில் இயல் 3 க்கான இயங்கலைத்தேர்வு 24-08-20 முதல் 31-08-20 வரை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. 

தேர்வுக்கான கட்டணம் ஏதுமில்லை.பத்தாம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே இதில் பங்கேற்கலாம்.60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறுவோருக்கு மட்டும் பதிவு செய்த மின்னஞ்சல் வழியே சான்றிதழ் அனுப்பப்படும்.

சான்றிதழ் கிடைக்காதவர்கள் தேர்வு நாட்கள் (8 நாட்கள்) முடிந்த பிறகு கீழ்வரும் எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.சரியான மின்னஞ்சல் முகவரியைப் பதிவிடவும்.

இல்லையெனில் சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் விவரங்களைத் தமிழிலேயே பதிவிடவும்).மாணவர்கள் கற்றலை மேம்படுத்த இத்தேர்வு நிச்சயம் உதவும்.

ஆசிரியப் பெருமக்களும் தேர்வு இணைப்பை மாணவர்களுக்குப் பகிர்ந்து,அவர்களது கற்றல் மேம்பட உதவவும்.

தேர்விற்கான இணைப்பு: http://thamizhpozhilvasu.blogspot.com/2020/08/3.html

தொடர்புக்கு: வெ.க.வாசு, தமிழாசிரியர், அ.உ.நி.பள்ளி, தணிகைப்போளூர், அரக்கோணம், இரா.பே.மாவட்டம், அலைபேசி: 9659838387

No comments:

Post a Comment