Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, August 12, 2020

தலைவலியை உடனடியாக சரி செய்ய




இப்பொழுது காலகட்டத்தில் பெரும்பாலானவர்களுக்கு தலைவலி பிரச்சினை தான் முக்கிய காரணமாக அமைகிறது. தலைவலி வந்துவிட்டால் என்ன செய்வது என்று ஒன்றும் புரியவில்லை. எனவே இந்த தலைவலியை உடனடியாக சரி செய்வதற்கு வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து என்ன பண்ணலாம் என்று இப்பதிவில் நாம் முழுமையாகப் பார்க்கலாம்.

தலைவலி பிரச்சினைகள் எப்படி வருகிறது:

தலைவலி பிரச்சினை என்பது மன அழுத்தத்தினால் தான் வருகிறது. அது மட்டுமல்லாமல் தூக்கமின்மை தான் முக்கிய காரணமாக இருக்கிறது.

அதைப்போல் செரிமான சக்தி இல்லாதவர்களுக்கு தலைவலி பிரச்சினை என்பது அதிகமாக இருக்கும். இதுபோன்ற பிரச்சனைகளை சரி செய்வதற்கு என்ன செய்யலாம் என்று இப்பொழுது பார்க்கலாம்.

தலைவலி பிரச்சனையே சரி செய்வதற்கு உதவும் பொருட்கள்:

புதினா இலைகள்:

புதினா இலைகளை வைத்து தலைவலி பிரச்சினை எப்படி சரி செய்வது என்று பலருக்கும் கேள்வி இருக்கிறது. ஆனால் கண்டிப்பாக புதினா இலையை வைத்து தலைவலியை சரிசெய்துவிடலாம். சிறிதளவே புதினாவை எடுத்துக்கொள்ளுங்கள் அதனை தண்ணீரில் நன்றாகக் கொதிக்க வைத்து. அந்த நீரில் ஆவி பிடித்து வந்தால் கண்டிப்பாக தலைவலி பிரச்சினை என்பது சரியாகிவிடும்.

சிறிது இஞ்சியை எடுத்துக்கொள்ளுங்கள்:

இஞ்சியை வைத்து எப்படி தலைவலி பிரச்சனையை சரிசெய்வது! இஞ்சி என்பது மிக மிக ஆரோக்கியமான ஒன்று. கண்டிப்பாக இஞ்சியை உணவில் நாம் அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் அது செரிமான சக்திக்கு உதவும். பொதுவாக செரிமான சக்தி இல்லாதவர்களுக்கு தலைவலி என்பது அடிக்கடி ஏற்படும். எனவே செரிமான சக்தி கூட வேண்டும் என்றால் கண்டிப்பாக வாரத்திற்கு ஒரு முறையாவது இஞ்சி சாறு குடிக்க வேண்டும் அதுடன் சில துளிகள் எலுமிச்சை பழம் கலந்து குடித்தால் கண்டிப்பாக தலைவலி பிரச்சனை என்பது முற்றிலுமாக சரியாகிவிடும்.

இரண்டு கிராம்பு எடுத்துக் கொள்ளுங்கள்:

கிராம்பு என்பது அதிகமான மருத்துவ குணங்களைக் கொண்டது. எனவே கிராம்பு வைத்து மிக எளிதாக தலைவலி பிரச்சனையை சரிசெய்துவிடலாம். அதாவது உங்களுக்கு தலைவலி வந்த உடன் இரண்டு கிராம்பை எடுத்து வாயில் போட்டு சாப்பிடுங்கள் கண்டிப்பாக சிறிது நேரத்தில் உங்கள் தலைவலி என்பது சரியாகிவிடும் மற்றும் பறந்துவிடும்.

மஞ்சள் தூள் ஆவி பிடிப்பது:

தீராத தலைவலி பிரச்சினை இருந்தால் கண்டிப்பாக சிறிதளவு தண்ணீரில் சிறிதளவு மஞ்சள் தூள் போட்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். பின்பு அந்த தண்ணீரில் ஆவி பிடித்து வந்தால் கண்டிப்பாக உங்கள் தலைவலி பிரச்சினை என்பது சரியாகிவிடும். எப்பொழுதெல்லாம் தலைவலி வருகிறதோ இது போன்று வீட்டில் செய்து பாருங்கள் கண்டிப்பாக தலையில் இருக்கும் நீர்கள் அனைத்தும் வெளியேறிவிடும். அதைப்போல் தலைவலி பிரச்சினை சரியாகிவிடும்.

No comments:

Post a Comment