Subscribe Us

Saturday, September 19, 2020

பி.ஆர்க்., கவுன்சிலிங் பதிவுக்கு நாளை கடைசி

பி.ஆர்க்., மாணவர் சேர்க்கைக்கான, 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு, நாளை முடிகிறது.

தமிழகத்தில் உள்ள கட்டட அமைப்பியல் கல்லுாரிகளில், பி.ஆர்க்., படிப்பில், முதலாம் ஆண்டில் மாணவர் சேர்க்கைக்கு, தமிழக அரசின் சார்பில், ஆன்லைன் கவுன்சிலிங் நடத்தப் படுகிறது.தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம், இந்த கவுன்சிலிங்கை நடத்துகிறது. கவுன்சிலிங்கில் பங்கேற்க விரும்பும் மாணவர்களுக்கு, ஆன்லைன் விண்ணப்ப பதிவு, செப்டம்பர், 8ல் துவங்கியது. நாளையுடன் விண்ணப்ப பதிவு முடிகிறது. 

பிளஸ் 2 முடித்து, 'நாட்டா' என்ற தேசிய நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், இந்த கவுன்சிலிங்குக்கு விண்ணப்பிக்கலாம். இதையடுத்து, சான்றிதழ் பதிவேற்றம் அறிவிக்கப்படும் என, கவுன்சிலிங் சேர்க்கை குழுவினர் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

Popular Feed