ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப முதல்வர் உத்தரவிட்டுள்ளார் - அமைச்சர் செங்கோட்டையன்

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டி பாளையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது :

சட்டமன்ற தேர்தலுக்கு பின்பே பொதுத்தேர்வு குறித்த அட்டவணை வெளியிடப்படும். பள்ளிகளில் வாக்குப்பதிவு நடைபெறும் என்பதால் அதற்கு பின்னறே பொதுத்தேர்வு நடத்தப்படும்.

ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு பள்ளி திறப்புக்கு பின்னறே நடத்த முதல்வர் அறிவிப்பார்.

ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப முதல்வர் ஆணை பிறப்பித்துள்ளார். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
Share:

No comments:

Post a Comment

Total Pageviews

Categories

Thamizhkadal WhatsApp Channel